யாழ்.தையிட்டி பகுதியில் தொடரும் பதற்றம்! நள்ளிரவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டத்தரணி

யாழ்.தையிட்டி பகுதியில் தற்போது நிலவும் பதற்றமாக சூழ்நிலையில், சட்டதரணி சுகாஸ்ற்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் குடித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அங்கிருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததையடுத்து அங்கு சட்டத்தரணிக்கும் பொலிஸாருக்கம் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி சட்டத்தரணி சுகாஸ் அங்கு குடித்துவிட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்

யாழ்.தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராகவும், விகாரையை சூழ இருக்கின்ற தமிழர்களின் காணிகளை இராணுவத்தினரும் பொலிஸாரும் சேர்ந்து ஆக்கிரமிப்பதற்கு எதிராகவும் ஜனநாயக முறைக்கு கீழ் முன்னெடுக்கப்பட்ட போராட்டதில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி ந.காண்டீபன் இருவரையும் பொலிஸார் தனிப்படுத்தி  சிறைப்பிடித்து வைத்திருப்பதாக‘‘ சட்டதரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews