பாலத்திற்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள்: இளைஞன் பலி: ஒருவர் படுகாயம்!

மன்னார் நானாட்டான் – முத்தரிப்புத்துறை பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் ஒரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முசலி, முத்தரிப்புத்துறை கிராமத்தில் இருந்து நானாட்டான் நோக்கி மோட்டார்... Read more »

இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்? – ஆய்வாளர் நிலாந்தன்

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம்,உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் கொங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள். தாயகத்தில் பெரும்பாலான கட்சிகள் அப்பிரகடனத்தை நிராகரித்துவிட்டன.குடிமக்கள் சமூகங்களும்... Read more »

400 கிலோ எடையுள்ள மஞ்சள் மூடைகள் காக்கைதீவு பகுதியில் மீட்பு!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காக்கைதீவு பகுதியில் இருந்து 16 மஞ்சள் மூடைகள் இன்றையதினம் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட மூடைகளில் 400 கிலோ மஞ்சள் காணப்பட்டதாக அறியப்படுகிறது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப் படையிரால் இந்த மீட்பு... Read more »

தரக்குறைவான ஊசியாலும் சரியான சிகிச்சை இன்மையாலுமே சுபீனா உயிரிழப்பு – சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டு…!

தரமற்ற ஊசியை செலுத்தியதாலும் சரியான முறையில் சிகிச்சை வழங்காததினாலுமே தனது தங்கை உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் உடன் பிறந்த சகோதரி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.   யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவி குணரத்தினம் சுபீனா அவர்கள் உடல் சுகயீனம் காரணமாக தெல்லிப்பளை... Read more »

மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் 25ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகளை மூடுமாறு மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். நத்தார் தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன. எவ்வாறாயினும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர வகைப்பாட்டின் கீழ்... Read more »

கப்பல் மாதா உதவும் கரங்கள் அமைப்பினரால் மாணவர்கள்,ஆசிரியர்கள் கெளரவிக்கும் நிகழ்வு….!

  கப்பல் மாதா உதவும் கரங்கள் அமைப்பினரால் மாணவர்கள்,ஆசிரியர்கள் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 3.00 மணியளவில் கட்டைக்காடு மரியாள் மண்டபத்தில் ஆரம்பமான குறித்த நிகழ்விற்கு கெளரவ விருந்தினராக யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்டணம் அடிகளார் கலந்து கொண்டார். சிறப்பு... Read more »

மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

நாட்டில் எதிர்வரும் வார விடுமுறை நாட்களில் மின்வெட்டை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகபூர்வ x தளத்தில் பதிவொன்றியை இட்டு அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை அவசர பராமரிப்புப்... Read more »

விந்துலை கிளன் ஈகல் தமிழ் வித்தியாலயத்தில் கற்பித்த  ஆசிரியைக்கு நீதி வழங்கிய மனித உரிமை ஆணைக்குழு…..!

விந்துலை கிளன் ஈகல் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்பித்த ஆசிரியையான றோகினி கிளாறோ எனும்  ஆசிரியருக்கு  எதிராக அதிபர் இரண்டு  மாத சம்பளம் வழக்காது நிறுத்திவைத்ததுடன் அவருக்கு பல வழிகளிலும் உள நெருக்கடிகளையும்  கொடுத்துவைத்ததுடன் அவருக்கு ஏதிராக பலவகையான அவதூறுகளை ஏற்படுத்தியும் வந்துள்ளார். இந்நிலையில்... Read more »

ஈழத்துக் குயில் கில்மிஷாவிற்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் பாராட்டு

இந்தியாவின் இசை மகுடத்தை சூடிய கில்மிஷா மென்மேலும் வளரவேண்டும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வாழ்த்து. இந்தியாவின் இசை மகுடத்தை சூடி எமது நாட்டுக்கு பெருமை சேர்த்த யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கில்மிஷாவுக்கு முன்னாள் கல்வி இராஜாங்க... Read more »

அபிவிருத்திகளை கண்காணிக்க பிரதேச மட்டக் குழுக்கள் – சொண்ட் நிறுவனப் பணிப்பாளர் செந்தூர்ராஜா தெரிவிப்பு!

நீடித்து நிற்கும் நிலைபேறான அபிவிருத்தி திட்டங்களை உரிய முறையில் கண்காணிப்பதற்கு பிரதேச மட்டக் குழுக்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என சொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் செந்தூர்ராஜா தெரிவித்தார் . யாழ்ப்பாண பொது நூலகத்தில் இடம் பெற்ற புத்திஜீவிகள் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான நீடித்தது நிற்கும்... Read more »