மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் 25ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகளை மூடுமாறு மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.

நத்தார் தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன.

எவ்வாறாயினும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர வகைப்பாட்டின் கீழ் மது விற்பனைக்கான மதுவரி உரிமம் பெற்ற ஹோட்டல்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என மதுவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்கிழமை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் மதுபானம் விற்பனை செய்யும் அனைத்து மதுவரி உரிமம் பெற்ற இடங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்படி உத்தரவு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், மேலதிக மதுவரி ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews