வரலாற்றுச் சிறப்பு மிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் இரதோற்சவம்!

  வரலாற்றுச் சிறப்பு மிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் வைகுண்ட ஏகாதசி தேர்த்திருவிழா இன்றையதினம் வெகு சிறப்பாக இடம்பெற்றது. சுவர்க்கவாயில் தரிசனம் இடம்பெற்று அதைத் தொடர்ந்து வசந்தமண்டப பூசை இடம்பெற்றது. ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வரதராஜப் பெருமாள் தேரில் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு... Read more »

தையல் பயிற்சி நிறைவு விழாவும், சான்றிதழ் வழங்கலும்….!

சிலை தையல் பயிற்சி நிலையதில் தையல் பயிற்சி, ஆரி பயிற்சி, எம்பிராய்டரி பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று காலை வடமராட்சி பருத்தித்துறை வியாபாரி பொது மண்டபத்தில் சிபூ தையல் பயிற்சியகத்தின் நிர்வாகியும், தையல் பயிற்சி ஆசிரியருமான திருமதி நிதர்சன் சிபூசா... Read more »

தமிழக மீனவர்கள் 25 பேருக்கும் விளக்கமறியல்!

பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்த 25 தமிழக மீனவர்களை வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த டிசம்பர் 09... Read more »

அரசாங்க ஊழியர்களுக்கு விடுமுறையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

அரசு ஊழியர்களுக்காக விடுமுறைகளை குறைக்க அரசாங்கம் திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய ஆண்டுக்கு 42 உள்ள சாதாரண மற்றும் ஓய்வு விடுமுறையின் எண்ணிக்கையை 25 நாட்களாக குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட விதிகளை மறுசீரமைக்க ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி.டயஸ்... Read more »

யாழ் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் பிரிவினரால் திருநெல்வேலியில் திடீர் பரிசோதனை!

யாழ் மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் கடந்த வாரம் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள பல வியாபார மையங்களில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ் வேளையில் வியாபாரிகளினால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்த போது அளவீட்டு அலகுகள் நியமங்கள்... Read more »

யாழில் கடந்த சில நாள்களில் குற்றச் செயல்கள் சடுதியாகக் குறைவு!சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பொலிஸாரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாள்களில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைந்துள்ளது என்று யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல்களைக்... Read more »

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு 6.6 கோடி பெறுமதியான உடல் குழாய் உற்று நோக்கல் இயந்திரம் (Olympus Endoscopy system) கையளிப்பு!

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு 6.6 கோடி பெறுமதியான உடல் குழாய் உற்று நோக்கல் இயந்திரம் (Olympus Endoscopy system) ரொட்டரி கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தெற்கு ரொட்டரி கழகத்தின் ஏற்பாட்டில், அவுரேலியன் மெடிக்கல் பவுண்டேசனின் நிதி பங்களிப்புடன் சர்வதேச ரொட்டரி கழகங்களினால் 6.6 கோடி பெறுமதியான குறித்த... Read more »

கொள்கைத்தவறுகளையும் அணுகுமுறைத்தவறுகளையும் கொண்ட பிரகடனம் – சி.அ.யோதிலிங்கம்

உலகத்தமிழர் பேரவையின் இமாலயப்பிரகடனம் பலத்த எதிர்வினைகளை தமிழ்த்தேசியப்பரப்பில் உள்ளவர்களிடம் உருவாக்கியுள்ளது. தமிழ்த்தேசியக்கட்சிகள் , சிவில் அமைப்புக்கள், கருத்துருவாக்கிகள் என பல தரப்பினர் எதிர்வினைகளைக் காட்டியுள்ளனர். தமிழரசுக்கட்சியில் சுமந்திரன், சம்பந்தன் , சாணக்கியன் மட்டுமே ஆதரித்துள்ளனர். ஏனையவர்கள் எதிர்த்துள்ளனர். சுமந்திரன் மேற்படி பிரகடனத்தில் ஒற்றையாட்சி இல்லை,... Read more »

விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை; பருத்தித்துறையில் 30 பேர் கைது!

மோப்ப நாயின் உதவியுடன் பருத்தித்துறை பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.... Read more »

புதிய இந்திய உயர் ஸ்தானிகர் – நற்சான்றுப் பத்திரத்தை வழங்கினார்!

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நற்சான்றுப் பத்திரத்தை வழங்கினார். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜூலை 2019 முதல் ஜூலை 2020 வரை உஸ்பெகிஸ்தானில் இந்தியத் தூதராக சந்தோஷ் ஜா பணியாற்றினார்.  ஜூலை 2017... Read more »