நாட்டில் மேலும் 18 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்துள்ளனர்.

நாட்டில் மேலும் 18 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 07 பெண்களும் அடங்குகின்றனர். இதற்கமைய நாட்டில்... Read more »

537 கொரோனாத் தொற்றாளர்கள் இன்று அடையாளம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 537 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 33 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது.... Read more »

வடக்கில் மேலும் 30 பேருக்குக் கொரோனா!

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேர் உட்பட வடக்கில் மேலும் 30 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 206 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இவ்வாறு 30 பேருக்குத் தொற்று... Read more »

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு 2370 வீடுகள் பூர்த்தி.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட இரண்டு வீடுகள் உத்தியோகபூர்வமாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்தானிகர் டெனிஸ் சாய்பி அவர்களும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட வீடுகளை... Read more »

இழுவை வலை தடைச் சட்டத்தை கடந்த ஆட்சியில் பயன்படுத்தாதது ஏன்? – அமைச்சர் டக்ளஸ் கேள்வி.

இழுவை வலை தடைச் சட்டத்தினை உருவாக்கியதாக தெரிவிக்கின்வர்கள், அந்தச் சட்டத்தினை அமுல்ப்படுத்தாமல் இருந்தது எதற்காக என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தியக் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற எல்லை... Read more »

விவசாயிகள் எதிர்பார்க்கின்ற சேதன திரவம், நைதரசன் சாறு, களைநாசினி போன்றவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி.

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்ற சேதன திரவம், நைதரசன் சாறு, களைநாசினி போன்றவற்றை பெற்றக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக... Read more »

வடமராட்சி கல்வி வலய அதிபர்களும் போராட்டத்திற்கு ஆதரவு.

வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் நாளையும்,  நாளை மறுதினமும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இலங்கையில் நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள அதிபர்,  ஆசிரியர்கள் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரி தொழிற்சங்கங்களால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவாக கரவெட்டி கோட்ட மற்றும் பருத்தித்துறை கோட்ட அதிபர்கள்,... Read more »

நாளை, மறுதினம் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்…,!இலங்கை ஆசிரியர் சங்கம் பெற்றோரிடம் கோரிக்கை.

மாணவர்களை பணயமாக வைத்து அரசு நடாத்தும் கபட நாடகத்திற்கு பெற்றோர்கள் துணை போகாமல் நாளையும், நாளை மறுதினமும்  (21,22) நடைபெறும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீபன் தெரிவித்துள்ளார்.... Read more »

வடமராட்சி கிழக்கில் பொலிசாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் அகழ்வு! சுமந்திரன் எம்பி பகீர் குற்றச்சாட்டு.

இன்றைய தினம் பருத்தித்துறை மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் நீண்ட நாட்களாக  சட்டவிரோதமான மணல் கொள்ளை இந்த பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது குறிப்பாக... Read more »

யாழ் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்!

நீண்ட காலமாக யாழ் மாநகர சபைக்கென உத்தியோக பூர்வ இணையத்தளம் அற்றிருந்த நிலையில் யாழ் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்றைய தினம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது . யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் இணையத்தளமானது யாழ் மாநகர... Read more »