537 கொரோனாத் தொற்றாளர்கள் இன்று அடையாளம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 537 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 33 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 360 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 93 ஆயிரத்து 674 ஆக உயர்வடைந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews