நாணயச்சபை உறுப்பினர்களுடன் பணியாற்ற மத்திய வங்கி ஆளுநர் தயாராம்!

நாணயச்சபை உறுப்பினர்களுடன் பணியாற்ற மத்திய வங்கி ஆளுநர் தயாராக இருப்பதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி நந்தலால் வீரசேகரா விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இலங்கை மத்திய வங்கியின் புதிதாக பதவியேற்ற ஆளுநர் என்ற வகையில், நாணயச் சபைக்கு நியமிக்கப்பட்ட... Read more »

கடலோரப் புகையிரத பாதையில் புகையிரத சேவைகள் தாமதம்.

தண்டவாளம் சேதமடைந்ததால் கடலோரப் புகையிரத பாதையில் புகையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பலாங்கொட மற்றும் பலபிட்டிக்கு இடையிலான புகையிரத பாதையில் சேதம் ஏற்பட்டுள்ளதால் புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு கோட்டையில் இருந்து பெலியத்த நோக்கி பயணத்தை ஆரம்பித்த... Read more »

அச்சுவேலியில் டீசல் நிரப்ப சென்ற பாரவூர்தி மோதி முதியவர் சாவு!

துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர், பின்னால் சென்ற பாரவூர்தி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று நண்பகல் அச்சுவேலி – தெல்லிப்பழை வீதியில் இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது. அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரட்ணம் (வயது-72) என்ற முதியவரே சம்பவ இடத்தில்... Read more »

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வயோதிப தம்பதி மழை கோட்டுகளை விநியோகிப்பு.

கொட்டும் மழையையும் பாராது கொழும்பு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவர்களுக்கு 60 வயதுக்கு உட்பட்ட வயோதிப தம்பதியொன்று, 500 மழை கோட்டுகளை விநியோகித்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஆர்ப்பாட்டத்தில் தன்னார்வ தொண்டார்கள் மதிய உணவு, தண்ணீர் போத்தல்களை விநியோகித்தமையும்... Read more »

தேசிய பிக்கு முன்னணியின் ஏற்பாட்டில் சத்தியாக்கிரக போராட்டம்.

மக்களை துன்புறுத்தும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் மக்கள் ஆட்சியை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் தேரர்களின் பேரணியும் சத்தியாக்கிரக போராட்டமும் கொழும்பு மஹரகம பிரதேசத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. தேசிய பிக்கு முன்னணியின் ஏற்பாட்டில் இந்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து கண்டி நகரில் பேரணி.

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கண்டி நகரில் பாரிய பேரணியொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மக்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். Read more »

போதைப் பொருட்களுடன் எழுவர் கைது

April 10, 2022 0 9   Facebook   Twitter   Pinterest   WhatsApp \\\ கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில், பொலிஸார் நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் ஹெரோய்ன் போதைப் பொருட்களுடன் எழுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தின் பேலியாகொட, பொரளை... Read more »

அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இடைக்கால அரசாங்கம் தொடர்பான அவர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால... Read more »

புத்தாண்டு காலத்திலும் தொடர்ந்து மக்கள் வரிசையில்.

டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய், எரிவாயு போன்றவற்றிற்காக மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது. சிங்கள, இந்து புத்தாண்டு இன்னும் சில தினங்களில் உதயமாகவுள்ள போதிலும், தமது அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் உள்ள சிரமம் காரணமாக மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.... Read more »

வவுனியாவில் குருமார் அமைதிப் போராட்டம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் இருந்து நாடு மேம்பட வேண்டி ’தந்தையே எமது தேசத்தை விழித்தெழ செய்வீர்’ என்ற தொனிப்பொருளில் அமைதிப்பேரணியொன்று நேற்று (9) மாலை இடம்பெற்றது. கிறிஸ்தவ மதகுருமாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி வவுனியா... Read more »