அச்சுவேலியில் டீசல் நிரப்ப சென்ற பாரவூர்தி மோதி முதியவர் சாவு!

துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர், பின்னால் சென்ற பாரவூர்தி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று நண்பகல் அச்சுவேலி – தெல்லிப்பழை வீதியில் இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.

அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரட்ணம் (வயது-72) என்ற முதியவரே சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காகச் சென்ற பாரவூர்தி முன்னால் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவரை மோதித்தள்ளியது என்று பொலிஸார் கூறினர்.

விபத்துத் தொடர்பில் அச்சுவேலி போலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews