புத்தாண்டு காலத்திலும் தொடர்ந்து மக்கள் வரிசையில்.

டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய், எரிவாயு போன்றவற்றிற்காக மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது. சிங்கள, இந்து புத்தாண்டு இன்னும் சில தினங்களில் உதயமாகவுள்ள போதிலும், தமது அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் உள்ள சிரமம் காரணமாக மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.... Read more »

வவுனியாவில் குருமார் அமைதிப் போராட்டம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் இருந்து நாடு மேம்பட வேண்டி ’தந்தையே எமது தேசத்தை விழித்தெழ செய்வீர்’ என்ற தொனிப்பொருளில் அமைதிப்பேரணியொன்று நேற்று (9) மாலை இடம்பெற்றது. கிறிஸ்தவ மதகுருமாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி வவுனியா... Read more »

மன்னாரில் இருந்து இன்றும்   19 பேர் தமிழகம் சென்றடைந்தனர்!

மன்னாரில் இருந்து இன்றும் படகுகள் மூலம்  19 பேர் தமிழகம் சென்றடைந்துள்ளனர். மன்னாரில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேரே இவ்வாறு தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு தப்பிச் செல்வது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »

அரசு கவிழ்ந்தது – புதிய பிரதமா்?

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது சனிக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றி பெற்றதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது. புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சித் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்பாா்... Read more »

இன்று 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி.

தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில... Read more »

அச்சுவேலியில் வீடு உடைத்துக் கொள்ளை..! கொள்ளையடித்த பொருட்களுடன் ஒருவர் சிக்கினார்.. |

யாழ்.அச்சுவேலி கலாமினி திருமண மண்டபத்திற்கு அருகில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், கைதான நபரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒரு தொகை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 9ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பிலேயே காங்கேசந்துறை விஷேட குற்றத்தடுப்பு பொலிசார்... Read more »

நம்பிக்கையில்லா பிரேரணையை தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆதரிக்கும்..!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவர முயற்சிக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆதரிக்கும் என கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் கூறியுள்ளார்.  நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்... Read more »

வங்காள விரிகுடாவில் வளிமண்டல சுழற்சி..! வடக்கில் அடுத்த 3 நாட்களுக்கு மழை, சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா.. |

இலங்கைக்கு தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள வளிமண்டல சூழற்சியினால் அடுத்துவரும் 3 நாட்களுக்கு வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் மிதமானது தொடக்கம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  மேற்படி தகவலை யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, இந்த... Read more »

11ம், 12ம் திகதிகளில் மின்வெட்டு..!

நாடு முழுவதும் எதிர்வரும் 11ம், 12ம் திகதிகளில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்திருக்கின்றது. இதற்கமைய, எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் A முதல் L வரையான வலயங்களில் காலை 8.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியினுள் 2... Read more »

அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பை கேட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு விண்ணப்பம்..!

நாட்டில் தற்போதுள்ள நிலைமையினை கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப பொலிஸாருக்கு உதவ இராணுவத்தின் உதவியை பெற பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு... Read more »