14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் உட்பட இருவர் கைது!

14 வயதான சிறுமைிய நீண்ட நாட்களாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சிறுமியின் உறவினரான பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

32 வயதுடைய கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரும், மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஆணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 14 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியை அவரது உறவுமுறை பெண்ணொருவர் பலவந்தமாக அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக

இரகசிய தகவல் கிடைத்தமைக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போதே மேற்குறிப்பிட்ட இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

Recommended For You

About the Author: admin