முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் நீரில் மூழ்கி இளைஞன் மரணம்!

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில், மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் குளத்தில் மீன்பிடிக்க சென்று, படகு கவிழ்ந்து நீரில் மூழ்கிய நிலையில், இளைஞர் ஒருவர் காணாமல் போயிருந்தார்.
அதனையடுத்து, அவரை, கிராம மக்கள், பொலிசார், இராணுவத்தினர் என பல்வேறு தரப்பினரும் தேடுதல் மேற்கொண்ட நிலையில், இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு, மாங்குளம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில், 5 ஆம் கட்டை அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த, 24 வயதுடைய, விஜயரட்ணம் நிலவன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin