கிளிநொச்சியில் பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில், கோரக்கண் கட்டு பூங்காவன சந்திப்பகுதியில் உள்ள தனியார் காணியில் இருந்து, துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு பூங்காவன சந்திப் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கழமை குழி ஒன்றை வெட்டிய போது, சில துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, கிளிநொச்சி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அதனையடுத்து, கடந்த திங்கட்கிழமை, சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர், குறித்த பகுதியில் இருந்து, துப்பாக்கி ரவைகள் அடங்கிய இரு பெட்டிகளை மீட்டனர்.
அத்துடன், சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக, குறித்த பகுதி கிராம அலுவலர் கோணாமலை சேகர் முன்னிலையில், இன்று முற்பகல் 9.00 மணி முதல் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது, பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin