ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லை….!காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் புறக்கணிப்பில்……!

ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லையென தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் மற்கொண்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தம்கு தீர்வு கிடைக்காது என தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் புறக்கணிப்பில் இன்று ஈடுபட்டிருந்தனர்.
காணாமல் போனோர் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தது.
இதன்போதே குறித்த ஆணைக்குழுவிலும் தமக்கு தீர்வு பெற்றுத்தர முடியாது எனவும், ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆணைக்கழுக்கள், காணாமல் போனோர் அலுவலகத்தினால் எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில் இந்த ஆணைக்கழுவும் எமக்கு எத்தீர்வையும் வழங்காது என தெரிவித்தே அவர்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்க தலைவில் குாகிலவாணி இவ்வாறு தெரிவிக்கின்றார்.,
இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். நாங்கள் இன்று பதினொரு வருடமாக ஜனாதிபதி ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழுக்கள் உள்ளிட்டவற்றை சந்தித்து முறைப்பாடுகளை செய்துள்ளுாம்.
காணாமல் போனோர் அலுவலகத்திற்கு ஐந்து பேரினது தகவல்களை ஒப்படைத்தோம். அந்த ஐந்து பேரினது தகவல்களைக்கூட பெற்றுத்தரவில்லை. அவர்களால் தரவும் முடியவில்லை.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ஆணைக்கழு சென்று மாவட்டச் செயலகத்தில் தங்களிற்கு ஏற்றவர்களைக்கொண்டு தமக்கு சாதகமாக ஜெனிவாவில் விடயங்களை சமர்ப்பிப்பதற்காக காணா் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என தமக்கு ஏற்றவர்களை அழைத்து பொய்யான வாக்குமூலங்களை எடுத்துள்ளார்கள்.
அந்த வகையில் இன்றைய தினம் உள்ளு வந்து எமது எதிர்ப்பினை தெரிவிக்குமாறு கேட்டிருந்தார்கள். அவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நாங்கள் உள்ளு வரவில்லை எனவும், வெளியே இருந்தவாறே எதிர்ப்பை தெரிவிப்பதாக கூறியிருக்கின்றோம்.
இன்று எத்தனையோ அணைக்குழுக்களிடம் பதி்தும் எமக்கு தகவல் ஏதும் கிடைக்கவில்லை. அந்த வகையில் நாங்கள் உள்ளு செல்லவில்லை. ஆனபடியினால் இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவை எதிர்த்து வெளியில் நின்று போராடுகின்றோம் என அவர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews