கொத்துரொட்டி வாங்க சென்ற இளைஞர் படுகொலை.

கொத்துரொட்டி வாங்குவதற்காக சென்ற இளைஞர் ஒருவர், ஹோட்டல் உரிமையாளருடன் ஏற்படுத்திக்கொண்ட முறுகலையடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம், காலி பத்தேகம நகொடவில் நேற்று (2) இடம்பெற்றுள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், 26 வயது இளைஞர் ஒருவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பத்தேகம நாகொட பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றுக்கு கொத்துரொட்டி வாங்குவதற்காக நேற்று (2) இரவு 11.30 மணியளவில் இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.

இதன்போது குறித்த இளைஞருக்கும் ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆத்திரத்தில் ஹோட்டலிலிருந்து வெளியேறிய இளைஞர், தனது வீட்டுக்கு சென்று ஆயுதமொன்றை எடுத்துவந்து ஹோட்டல் உரிமையாளரை தாக்கியுள்ளார்.

இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளரும் அவரது மகனும் இணைந்து குறித்த இளைஞன் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் குறித்த இளைஞர் மரணமடைந்தார்.

அத்துடன் தாக்குதலில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews