யாழில் தொடரூந்து சேவைக்கான ஆசன முற்பதிவுகள் இன்று முதல் ஆரம்பம்!

காங்கேசன்துறை – கல்கிசை இடையிலான காலை நேர தொடருந்து சேவைக்கான ஆசன முற்பதிவுகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று யாழ்ப்பாணம் ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் அறிவித்துள்ளார்.

காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 5.30 மணிக்கும் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திலிருந்து 6.10 மணிக்கும் சேவையை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவை நாளை முதல் சேவையை மீள ஆரம்பிக்கவுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்தும் என இரு ரயில் சேவை மறுஅறிவித்தல் வரை இடம்பெறவுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews