யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 2 நாட்களான சிசுவுக்கு கொரோனா தொற்று! 2 வயோதிப பெண்கள் தொற்றால் உயிரிழப்பு, 25 பேருக்கு தொற்று..!

பிறந்து 2 நாட்களான சிசு உட்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் இரு வயோதிப பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் 120 பேருக்கு நடத்தப்பட்ட பீ.பி.ஆர் பரிசோதனையில் 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 2 நாட்களான சிசு உட்பட 5 பேர், சாவகச்சோி வைத்தியசாலையில் 3 பேர், சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர்,

சங்கானையில் ஒருவர், காங்கேசன்துறை கடற்படைமுகாமில் 2 பேர், வவுனியா மாவட்டத்தில் 6 பேர், கிளிநொச்சியில் 2 பேர்(தொற்றுக்குள்ளான இருவரும் உயிரிழப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேருக்கு தொற்று உறுதி

Recommended For You

About the Author: Editor Elukainews