பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைவிழுந்தான் பகுதியில் விபத்து.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைவிழுந்தான் பகுதியில் இன்று (10)கப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது.


குறித்த வாகனம் கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கப் ரக வாகனம் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென அவரது தலைக்கவசம் கீழே விழுந்ததையடுத்து சமிக்ஞைகள் ஏதும் இல்லாமல் வீதியின் குறுக்கே நிறுத்தியுள்ளார். கப்ரக வாகனம் நிறுத்த முற்பட்ட வேளை அருகில் இருந்த நீர்பம்பியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் கப் ரக வாகனத்தில் பயணித்த மூவர் சிறுகாயங்களுக்குள்ளானர்.

மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews