இராணுவ தினத்தையொட்டி படையினரால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு குருதி கொடை.

இராணுவ தினத்தையொட்டி படையினரால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு குருதி வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த 8ம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன்
வைத்தியசாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் குருதிக்கொடை வழங்குமாறு படையினரிடம் நான் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இராணுவ தினமான இன்று கிளிநொச்சி வைத்தியசாலைக்கு படையினர் குருதிக் கொடை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இரணைமடுவில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் குருதி வழங்கும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமானது. இதில் 100 க்கு மேற்பட்ட படையினர் குருதி கொடை வழங்க முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews