முச்சக்கர வண்டியின் சாரதி கூரிய ஆயுதத்ததால் தாக்கப்பட்டு படுகொலை….!

கந்தான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியின் சாரதி ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று கந்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தானை சாந்த செபஸ்தியன் மாவத்தைப் பகுதியில் இன்று (13) அதிகாலை 4.00 மணியளவில் இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் பேலியாகொட துட்டுகெமுனு மாவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த அன்ருவ் ஜோசப் வின்சன் பேர்னாட் (வயது 51) என்ற நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தி சென்றபோது இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபரின் மார்ப்புப் பகுதியில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

கந்தானைப் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews