வெளிநாடு செல்பவர்களுக்கு நிதி அமைச்சரின் மகிழ்ச்சித் தகவல்!

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்ல தயாராகவுள்ளவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற அந்நிய செலாவணி செயலணியின் முன்னேற்ற கலந்தாய்வு கூட்டத்தின்போதே நிதியமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையில் இலங்கையர்களுக்கு அதிக கேள்வி காணப்படுவதால், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய, தற்போது வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு, பயணிப்பதற்காக விமான இருக்கை வசதி பற்றாக்குறை குறித்து நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சர் கவனம் செலுத்தியதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews