கெசல்கமுவ ஓயா ஆற்றில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது –

மாணிக்கக்கல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன

கெசல்கமுவ ஓயா ஆற்றில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வரை, பொகவந்தலாவை பொலிஸார் இன்று (12) கைதுசெய்துள்ளானர்.

இதன்போது மாணிக்கக்கல் அகழ்வுக்குப் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews