நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும்போது தப்பி ஓடிய கைதி தமிழகத்தில் தஞ்சம்!

மன்னார் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பி ஓடிய கைதி ஒருவர் தமிழகத்தில் தஞ்சமடைந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

மன்னார் நீதிமன்றத்தில் நடந்த வழக்கிற்காக வவுனியா சிறைச்சாலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தப்பி ஓடியிருந்தார்.

குறித்த கைதி, நேற்று காலை மண்டபம் அகதி முகாமில் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான செல்வராஜ் சிந்துஜன் என்பவர், மன்னார் பொலீசாரால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அண்மையில் தப்பியோடியிருந்த அவர் கடல் மார்க்கமாக மண்டபம் அகதி முகாமில் நேற்று அதிகாலை தஞ்சமடைந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சம்பவத்தின்போது தப்பிச்சென்ற மற்றைய கைதியைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews