வர்த்தகர் ஒருவரை கடத்தி 7 கோடி ரூபாய் கப்பம் வாங்கிய கும்பல்! வர்த்தகருக்கு மதுபானத்தை பருக்கி வீதியில் எறிந்துவிட்டுச் சென்ற சம்பவம், கடத்தல் குழு சிக்கியது… |

வர்த்தகர் ஒருவரை கடத்தி கப்பம் பெறுவதற்கு முயற்சித்த இரு வர்த்தகர்கள் அடங்கிய குழு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளது.

கிராண்ட்பாஸ் மார்கஸ் லேனில் வைத்து குறித்த தொழிலதிபரை வேனில் கடத்திச் சென்றவர்கள் ஆரம்பத்தில் தாங்கள் சி.ஐ.டி.யைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய நிலையில் பின்னர் கடத்தப்பட்ட வர்த்தகரின் கை, கால்களை கட்டியுள்ளனர்.

பின்னர் வீடொன்றுக்கு கொண்டு சென்று  தடுத்து வைத்து 7 கோடி ரூபாய் கப்பம் பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கப்பத் தொகையை பெற்றுக் கொண்ட குழுவினர் அவரை மீண்டும் வேனில் ஏற்றி, தெமட்டகொடை ரயில்வே குடியிருப்புக்கு அருகில் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், இந்த தொழிலதிபருக்கு வலுக்கட்டாயமாக மதுபானம் கொடுக்கப்பட்டதால் அவர் போதையில் வீதியில் விழுந்தார்.

பின்னர் இவர் தான் எதிர்கொண்ட சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews