வீதியில் நின்ற நாய்க்குட்டிகளை காரினால் நசுக்கி கொன்ற கோடீஸ்வர வர்த்தகரின் மனைவி சிக்கினார்!

வீதியில் நின்றிருந்த நாய்க்குட்டிகளை காரினால் நசுக்கி கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய கோடீஷ்வர வர்த்தகரின் மனைவி கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்.

சந்தேகநபர் கோடீஸ்வர வர்த்தகரின் மனைவி என பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 17 ஆம் திகதி மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காரின் முன் மற்றும் பின் சக்கரங்களில் சிக்கி இரண்டு நாய்க்குட்டிகளும் நசுங்கி உயிரிழந்தன.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதால், சம்பவம் குறித்து மதுரட்ட பொலிஸ் நிலையத்துக்கு கடந்த 18 ஆம் திபதி முறைப்பாடு வழங்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில்

விசாரணைகளை மேற்கொண்ட மதுரட்ட பொலிஸார் சந்தேக நபரான பெண்ணையும் அவரது கணவரான கோடீஸ்வர வர்த்தகரையும் மதுரட்ட பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர்

மிருகவதை குற்றத்துக்காக சந்தேகநபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வலப்பனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து

நீதிவான் சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews