ஒருமாத பசு கன்றின் தாய் திருட்டு,  கன்று அழுது புலம்பல், ஆறுமாதம் கருவுற்ற பசுவும் திருட்டு..!

முகமாலை பகுதியிலே இன்று அதிகாலை திருடர்களால் இரண்டு பசு மாடுகள் களவாடப்பட்டுள்ளதாக பளை  போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது பளை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று அதிகாலை திருடர்கள் இரண்டு விலை உயர்ந்த பசு  மாடுகளை திருடி சென்றுள்ளனர்.
 களவாடப்பட்ட மிக விலை உயர்ந்த பசுமாட்டில் ஒன்று கன்று ஈன்று ஒரு மாதங்கள் ஆகின்றனிலையிலேயே  களவாடப்பட்டுள்ளது. தாய் பசு பலவாடப்பட்டுள்ளதால்  கன்று அழுது புலம்பிய நிலையில் இருப்பதாக கிராம  மக்கள் தெரிவிக்கின்றனர்.
 திருடப்பட்ட மற்றைய  பசுமாடு ஆறு மாதங்கள் கருவுற்ற நிலையிலேயே  திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களவாடப்பட்ட பசுவின் கன்று அலறு சத்தத்தை கேட்டு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews