வெற்றிலைக்கேணி  பகுதியில் இடம்பெற்ற விபத்தில்  இருவர் படுகாயம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி  பகுதியில் இடம்பெற்ற விபத்தில்  இருவர் படுகாயடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் மிகவும் அவதான நிலையில் உள்ளதாகவும்,  வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்  என்றும் மற்றையவர்  வெற்றிலைக்கேணியை  சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
 குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவது.
வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றும்  தனது துணைவியாரை தனது உந்துருளியில் கடமைக்காக இறக்கி விட்டு அங்கிருந்து தனது கடமைக்காக  திரும்பிக் கொண்டிருந்த போது  எதிரே வந்த இன்னுமோர்  உந்துருளியுடன்  மோதியே குறித்த  விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன், விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக அருகில் உள்ளவர்களால் மீ மருதங்கேணி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவு வண்டியில் பருத்தித்துறை   பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து அங்கிருந்தும் மேலதிக சிகிச்சைக்காக  இருவரும் யாழ்  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 குறித்த விபத்து தொடர்பில் மருதங்கேணி போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews