நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு

இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இரண்டு வகையான எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, சிலோன் ஒயிட் டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் விலையை 10 ரூபாவினால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிலோன் ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 405 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 355 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews