19 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு – பரிதாபமாக உயிரிழப்பு..! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் விபரீத முடிவு எடுத்து 19 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி மாணவி இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார், இந்நிலையில் குறித்த இளைஞர் ஏமாற்றியதன் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

இம்மரணம் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews