யாழ்.வலி,மேற்கு பிரதேசசபையின் தலைமை காரியாலய ஊழியர்களுக்க தொற்று!

யாழ்.வலி,மேற்கு பிரதேசசபையின் தலைமைக் காரியாலய பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் காரியாலயம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன.

அத்தியாவசிய தேவை கருதி சுழற்சி முறையில் பணிக்கு அழைக்கப்பட்டுவந்திருந்தனர். அவர்களில் இருவர் நோய் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் பரிசோதனைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

அவர்கள் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் பணியாற்றிய இன்னொரு ஊழியருக்கும் நோய் அறிகுறி காணப்படுவதால் இன்று பரிசோதனைக்காக சென்றிருப்பதாக தெரியவருகிறது.

இந்நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை பணிமனையை தற்காலிகமாக மூடி அனைத்து ஊழியர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்று

பிரதேச சபை தவிசாளர் நடனேந்திரன் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews