யாழில் காலாவதியான பொருட்கள் வைத்திருந்த 12 வியாபாரிகளுக்கு 3 லட்சம் ரூபா தண்டம்!

திகதி காலாவதியான பொருட்கள் வைத்திருந்த 12 பலசரக்கு கடை உரிமையாளர்களுக்கு 305,000/= தண்டம் விதிப்பு.

யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ச்சியாக உணவகங்கள், பலசரக்கு கடைகள் என்பனவற்றை பரிசோதித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்தமாதம் யாழ்நகர், குருநகர், வண்ணார்பண்ணை பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் குழு, பலசரக்கு கடைகளில் தீடீர் பரிசோதனை மேற்கொண்டது.

இதன்போது யாழ்நகர் பகுதியில் 06 பலசரக்கு கடைகளிலும் குருநகர் பகுதியில் 05 பலசரக்கு கடைகளும் வண்ணார் பண்ணை புதியில் ஓர் கடையும், திகதி காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நிலையில் அதன் உரிமையாளர்கள் பொது சுகாதார பரிசோதகர்களிடம் சிக்கினர்.

திகதி காலாவதியான பொருட்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர்கள், கடை உரிமையாளர்களுக்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் கடந்த 14.11.2022ம் திகதி வழக்கு தாக்கல் செய்தனர். இன்றையதினம் 30.11.2022 ம் திகதி அவ்வழக்குகள் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன் போது கடை உரிமையாளர்கள் 12 பேரும் குற்றங்களை ஏற்று கொண்டதையடுத்து கடை மொத்தமாக 305,000/= தண்டப்பணமாக செலுத்துமாறும், திகதி காலாவதியான பொருட்களை அழிக்குமாறும் உத்தரவிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews