மட்டக்களப்பில் ‘தண்டனை விலக்களிப்புக்கு எதிர்ப்பை தெரிவியுங்கள் ஊடகவியலாளர்களிடம் இருந்து ஒரு வேண்டுகோள்’ எனும் தலைப்பிலான துண்டுப்பிரசுரம் விநியோகம்

உலக ஊடகவிலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான தண்டனை விலக்களிப்பை ஒழிக்கும் சர்வதேச தினத்தையிட்டு ‘; தண்டனை விலக்களிப்புக்கு எதிர்ப்பை தெரிவியுங்கள் ஊடகவியலாளர்களிடம் இருந்து ஒரு வேண்டுகோள்’ எனும் தொனிப் பொருளில் மட்க்களப்பு நகரில் இன்று புதன்கிழமை (02) துண்டுப்பிரசுரம் பிரசுரிக்கப்பட்டது

இந்த சர்வதேச தினத்தையிட்டு சுதந்திர ஊடக இயக்கம் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம், யாழ் ஊடக மையம், கிழக்கு ஊடக மையம் தெற்கு ஊடக மையம் இணைந்து இந்த துண்டுப்பிரசுரம் பிரசுரிக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்தனர்

இதற்கமைய கிழக்கு ஊடக மையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் ஒன்று திரண்டு மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் மற்றும் பஸ்தரிப்பு நிலையத்தில் மக்களுக்கு துண்டுபிரசுரத்தை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews