மட்டு நகரில் கஞ்சா வியாபாரி வீடு முற்றுகை 78 ஆயிரம் மில்லிக்கிராம் கஞ்சாவுடன் வியாபாரி கைது !

மட்டக்களப்பில் தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்திலகஞ்சா விற்பனை செய்துவரும் வீடு ஒன்றை இன்று புதன்கிழமை (2) முற்றுகையிட்ட பொலிசார் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட கஞ்சாவியாபாரியை 78 ஆயிரம் மில்லிக்கிராம் கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவதினமான இன்று பகல் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய சுற்றுச் சூழல் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்கா தலைமையில் பொலிஸ் சாஜன் ரி.கிருபா உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் கருவப்பங்கேணியிலுள்ள வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 21 வயதுடைய கஞ்சா வியாபாரியை 78 ஆயிரம் மில்லிக்கிராம் கஞ்சாவுடன் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews