பருத்தித்துறை நகரசபை முன்றலில் குடும்பம் ஒன்று போராட்டதில்…. !

தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து  பருத்தித்துறையை வீ எம் வீதியை  சேர்ந்த ஒருவர் இன்று பருத்தித்துறை நகரசபை முன்றலில் காலை 9:00 மணிமுதல் பிற்பகல்வரை  அவரது குடும்ப சகிதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
தமக்கு பாதிப்பான முறையில் அயல் வீட்டுக்காரர் ஒருவர் கட்டிடம் ஒன்றினை அமைத்து வருவதாக கடந்த வருடத்திலிருந்து அதாவது அயல்  வீட்டுக்காரர் கட்டிடம் கட்டுவதற்க்கு ஆரம்பித்த வேளையே பருத்தித்துறை நகர சபைக்கு முறையிட்டதாகவும்,  அதற்க்கு எந்தவிதமான நடவடிக்கையும் நகரசபையால்  எடுக்கப்படாத நிலையில் தாம் மீண்டும் மீண்டும் பல முறைப்பாட்டை செய்ததாகவும் ஆனால்  நகரசபை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே இன்று குடும்ப சகிதம் தாம் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், தெரிவித்ததுடன் தான் ஒரு பருத்தித்துறை நகர் பகுதியில் வணிக நிலையம் ஒன்றினை நடாத்தி வருவதாகவும் குறித்த பிணக்கு காரணமாக அண்மையில் இரவு வேளை தனது வணிக நிலையத்தில் இனந்தெரியாதவர்கள் தன் மீது மின்சாரம் தடைப்பட்டவேளை மிக மோசமாக  தாக்குதல் நடாத்தியதாகவும்,  தெரிவித்தார்.
இது தொடர்பில் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் திரு இருதயராசாவிடம் கேட்டபோது போராட்டத்தில் ஈடுபடும் நபரால் தமக்கு  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்க்கு அமைவாக தாம் தமது சட்டதிட்டங்களும்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொண்டதாகவும், தெரிவித்தார். குறித்த போராட்டத்தில் பருத்தித்துறை வீ.எம் வீதியை சேர்ந்த திரு பாலகுமார் மற்றும் அவரது   குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews