எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது? எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு, யாழ்ப்பாணத்தில் செயற்கை தட்டுப்பாடு.. |

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகள் வெறும் வதந்திகள் என எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜயசேகர கூறியுள்ளார்.

பொதுமக்களை மிக தவறாக வழிநடத்தும் வகையிலான வதந்திகளை பரப்பும் மற்றும் பகிரும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

இதேவேளை சமூக வலைத்தளங்களில் பரவும் இவ்வாறான போலி செய்திகளின் மூலம் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் செயற்கை தட்டுப்பாடு உருவாகும் அளவுக்கு

மக்கள் எரிபொருளை கொள்வனவு செய்வதை அவதானிக்ககூடியதாகவுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews