தான் உண்டியலில் சேகரித்த 4400 ரூபாய் பணத்தை இலங்கை மக்களுக்கு வழங்கிய தமிழக சிறுமி..!

தமிழகம் – ராமநாதபுரம் கீழக்கரை பகுதியை சேர்ந்த சிறுமி தான் உண்டியலில் சேகரித்த பணத்தை இலங்கை மக்களுக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

குறித்த பணத்தை ராமநாதனபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கையளித்திருக்கின்றார். பில்சா சாரா எனும் மாணவி வீட்டில் தனக்கென உண்டியலில் சேர்த்து வந்த 4400 இந்திய ரூபாய் பணத்தினையே அன்பளிப்பு செய்துள்ளார். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருவதால் இலங்கை மக்களுக்காக தனது சேமிப்பு பணத்தினை அன்பளிப்பாக வழங்குவதாக சிறுமி கூறியுள்ளார்.

சிறுமியின் இந்த செயற்பாட்டை மாவட்ட ஆட்சியர் பாராட்டி உள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews