சஜித்தை பிரதமர் பதவியை பொறுப்பேற்க கோரிய ஜனாதிபதி……!

நாடு எதிர்கொண்டிருக்கும் தற்போதுதைய நெருக்கடி நிலையில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும்படி சஜித் பிறேமதாஸவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந் நிலையில் அது தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று சனிக்கிழமை (7) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தை நடாத்தி ஆலோசனை கோரியுள்ள நிலையில்,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இராஜினாமா செய்வாராயின், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், முன்வைத்த 13 அம்ச ஆலோசனைக் கோவையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த

அரசாங்கத்துடன் பேச இதன்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் (6) இடம்பெற்ற விஷேட அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து, நேற்று (7) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு தொலைபேசியில் அழைத்து பிரதமர் பதவியை ஏற்க அழைப்பு விடுத்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews