இளைஞனை சித்திரவதை செய்து நிர்வாணப்படுத்தி புகைப்படம், வீடியோ எடுத்து அதனை பயன்படுத்தி கப்பம் பெற்ற கணவன் – மனைவி உட்பட 4 பேர் கைது..!

போலி முகநுால் கணக்கின் ஊடாக சாவகச்சோி இளைஞன் ஒருவனுக்கு காதல் வலைவீசி அவனை கோப்பாயில் உள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்து அறை ஒன்றில் பூட்டிவைத்து நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்ததுடன், நிர்வாண புகைப்படங்களை எடுத்து அதனை காண்பித்து அச்சுறுத்தி கப்பம் கோரிய கணவன்- மனைவி உட்பட 4 பேர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.கோப்பாய் – செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த இளம் கணவன் – மனைவி மற்றும் அவர்களுடைய சகோதரர்கள் இருவர் சேர்ந்து போலி முகநுால் கணக்கு ஒன்றின் ஊடாக சாவகச்சோியை சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கு காதல் வலை வீசியிருக்கின்றனர்.

பின்னர் கோப்பாயில் உள்ள தங்கள் வீட்டிற்கு அந்த இளைஞனை அழைத்து அறை ஒன்றினுள் வைத்துப் பூட்டியதுடன் இளைஞனை நிர்வாணமாக்கி, சித்திரவதை செய்து அதனை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்திரக்கின்றனர். பின்னர் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காண்பித்து அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பொவதாக கூறி அச்சுறுத்தி 2 லட்சம் ரூபாய் கப்பம் கேட்டுள்ளனர்.

இதனையடுத்து பயந்துபோன இளைஞன் அவர்களுடைய வங்கி கணக்கில் கடந்தவாரம் 2 லட்சம் ரூபாய் பணத்தை வைப்பிட்டுள்ளான். பின்னர் இந்த வாரம் அதே புகைப்படங்கள், வீடியோக்களை காண்பித்து 5 லட்சம் ரூபாய் கப்பம் கேட்டிருக்கின்றனர்.

இதனால் அச்சமடைந்த இளைஞன் கோப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் கணவன் – மனைவி உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கணவன் இராணுவத்தில் பணியாற்றி விலகியவர் என கூறப்படுகின்றது. சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews