ஊரடங்கு நேரத்தில் செய்தியாளர்கள் சந்திப்புகளுக்கு தடை விதிப்பு.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பு எதுவும் நடத்த முடியாது என்று யாழில் பொலிஸார் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்றைய தினம் கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த அலுவலகத்திற்குச் செய்தியாளர்கள் சென்ற வேளை, அவ்விடத்தில் திரண்ட பொலிஸார் ஊடகவியலாளர்களிடம் விசாரணை நடத்தியதுடன், இன்றைய தினம் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தியிருப்பதால் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

அத்துடன், செய்தியாளர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பன பதிவு செய்யப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews