வடமராட்சியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு, தனியார் போக்குவரத்து சேவையும் பாதிப்பு, ரிப்பர் லொறி என்பனவும் பாதிப்பு……!

வடமராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட குஞ்சர்கடை, நெல்லியடி கிராமக்கோடு, பருத்தித்துறை துறைமுகம், மந்திகை ,வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல், பெறறோல்,  மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்க்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
எனினும் மந்திகை ஏரிபொருள் நிரப்பு நிலைத்தில் பெட்ரோல்  மட்டும் விநியோகிக்கபடுகிறது.
இதேவேளை டீசல் இன்மைஅல் தனியார் சிற்றூர்தி சேவைப்  போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீதியோரங்களில் சிற்றூர்திகள் நிறுத்ப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
அதேவேளை ரிப்பர் மற்றும் பார ஊர்திகளும் டீசல் இன்மை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பலர் தமது பெற்றோல் வாகனங்களுக்கு சேமித்து வைத்தல் நோக்கத்திற்க்காக அதிகளவான பெட்ரோல் நிரப்பி செல்வதையும் அவதானிக்க முடிகிறது

Recommended For You

About the Author: admin