பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் பணிப்பகிஷ்கரிப்பு….!

நாடு முழுவதும் சுகாதாரத் துறை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும்  பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றுவருகிறது.

அவசர சிகிச்சை மற்றும் உள் நோயாளர்கள்  மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
வாளிநோயாளர் பிரிவிற்கு மருத்துவர் சமூகமளித்துள்ள  நிலையிலும்  மருந்தகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்ற மருந்தை தனியா மருந்தகங்களில் நோயாளிகள் பெற்றுக் கொள்வதை அவதானிக்க முடிகிறது.
மேலும்  மருத்துவ ஆய்வுகூட பணியாளர்களும்,பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் வெளி  நோயாளர் பிரிவில் தாதியர் சேவை உட்பட பல்வேறு மருத்துவ சேவைகளும்  ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
 அவசர சிகிச்சை நிமித்தம் மருத்துவமனைக்கு வருபவர்கள் மட்டும் உள் நோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.

Recommended For You

About the Author: admin