![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/02/IMG_20220228_114733-818x490.jpg)
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரடிபோக்கு சந்தி பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/02/IMG_20220228_114724-300x135.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/02/IMG_20220228_114733-300x135.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/02/IMG_20220228_114849-300x135.jpg)
கரடிப்போக்கு சந்தியில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவிலுள்ள கால்வாயில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் விபத்து ஒன்றினால் இடம்பெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். அதற்கான தடயங்கள் வீதியில் காணப்படுகின்றது. குறித்த சடலம் ஆணொருவரின் சடலம் ஆக காணப்படுகிறது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.