ஜேர்மன் அரச தலைவர் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜேர்மன் அரச தலைவர் ஓலாப் ஷோல்ஸ் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு பேர்ளினில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான இராஜாதந்திர உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் கலந்தாலோசித்துள்ளனர். அத்துடன், ஜேர்மன் அரச தலைவர் ஓலாப்... Read more »

தண்ணீர் தொட்டியில் தவறி வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு!

கிளிநொச்சி செல்வநகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி வீழ்ந்து சிறுமி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுமி ஒரு வயதும் 3 மாதமும் நிறைவடைந்த பெண்... Read more »

மக்களின் நம்பிக்கையை இழந்தது நீதித்துறை : யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகியமையால் மக்களின் நம்பிக்கையை நீதித்துறை இழந்துள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ரி.சரவணராஜா தொடர் அழுத்தங்கள் காரணமாக பதவியிலிருந்து விலகி... Read more »

ஜஸ்வர் உமர் மீண்டும் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக தெரிவு!

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான ஜஸ்வர் உமர் மீண்டும் சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் நேற்று கொழும்பில் நடைபெற்றமு. எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு பணியாற்ற அதிகாரிகளை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றதாக... Read more »

சிறீலங்கன் விமான சேவை இரத்து: ஆராய நடவடிக்கை!

சிறீலங்கன் விமான சேவையின் பயணங்கள் இரத்து செய்யப்படுகின்றமை, தாமதமாகின்றமை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடப்படவுள்ளது. சிறீலங்கன் விமான நிலைய தொழிற்சங்க உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கடந்த சில... Read more »

மின் கட்டண அதிகரிப்பால் உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சாத்தியம்!

மின்சார கட்டண அதிகரிக்கப்படுகின்றமையின் ஊடாக தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் என மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் நிலவுவதாக அதன் தேசிய அமைப்பாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்தார். ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து மின்கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை... Read more »

யாழில் மனித சங்கிலி போராட்டம்!

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி போராட்டம் வெற்றி அளிப்பதற்கு தமிழ் மக்கள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா தெரிவித்தார். உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதிவி விலகி... Read more »

வைஷாலியின் கையினை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப நீதிமன்று கட்டளை!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப நீதிமன்று கட்டளை பிறப்பித்தது. காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்... Read more »

நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது…! சுமந்திரன்

இன்றைக்கு நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதை குறித்து நாங்கள் கவனம் எடுக்க வேண்டிய ஒரு நிலையிலே இருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் சூரிய கல்வி நிறுவகத்தின் அனுசரணையில் இரண்டாம் மொழியான சிங்கள கற்கை நெறியை... Read more »

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவருக்குமிடையில் சந்திப்பு…..!

பின்லாந்து  மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவர் தீனா ஜோர்டிக்காவிற்கும், (Tiina jortikka) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்க்கும்  இடையில் சிறப்புச் சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. அனைத்துலக இராஜதந்திர கட்டமைப்பின் (IDCTE) ஒழுங்கமைப்பில்,  பின்லாந்து தேசத்தின், மனித உரிமைகளிற்கான சிறப்புத் தூதுவர் தீனா... Read more »