கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்தியர்கள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டமையால் நோயாளர்கள் பாதிப்பு

கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்தியர்கள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டமையால் நோயாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டனர். இன்றைய தினம் வைத்தியசாலையின் வெளிநோயளர் பிரிவு, மாதாந்த சிகிச்சைகள் இடம்பெறவில்லை. அத்தியாவசிய சிகிச்சைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக வருகை தந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதுடன்,... Read more »

மாகாண கல்வி அதிகாரங்களை மீட்கும் சட்ட போராட்டம் தொடரும் ; அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை – கலாநிதி சர்வேஸ்வரன் தெரிவிப்பு

மாகாண கல்வி அதிகாரங்களை மீட்கும் சட்ட போராட்டம் தொடரும் ; அரசியல்வாதிகளுக்கு அக்கறை  இல்லை – கலாநிதி சர்வேஸ்வரன் தெரிவிப்பு மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கும்  எண்ணத்தில் இருந்து அரசாங்கம் சற்று பின்வாங்கியுள்ள நிலையில் முழுமையாக அத்திட்டத்தினை கைவிடும் வரை நீதிமன்ற சட்டப் போராட்டம்... Read more »

வல்வெட்டித்துறையில் மோட்டார் குண்டு கண்டுபிடிப்பு

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி ஒன்றில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் மோட்டார் குண்டு ஒன்று இருப்பது இன்றையதினம் அவதானிக்கப்பட்டது. அதனையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அந்த குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Read more »

புனர்வாழ்வு பணியகத்தில் தலைமை அதிகாரியாக நியமனம்

யாழ்ப்பாணம் 511 படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய பிரிக்கேடியர் யூட் பெனார்ண்டோ கடந்த வெள்ளிக்கிழமை  புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் தலைமை அதிகாரிகளில் ஒருவராக இடம் மாற்றம் பெற்று சென்றுள்ளார். இவர் யாழ். மாவட்டத்தில் கடமையாற்றிய போது பல இந்து மற்றும் கிறித்தவ தேவாலயங்களை ... Read more »

யாழ். வலி. தெற்கு பிரதேச சபை பாரா முகம் – மக்கள் பெரும் அவதி!

யாழ்ப்பாணத்தில் காலை வேளையில் பெருமளவு மக்களும் மாணவர்களும் பயணிக்கும் முக்கியமான வீதியான மருதனார்மடம் – உடுவில் வீதியில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அப்பகுதி பெரும் அவதிப்படுகின்றது. மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக வாகனங்கள் நிறுத்த தடை என வலிகாமம் தெற்கு பிரதேச சபையினரால் அறிவித்தல் பலகை... Read more »

அரசாங்க வருமானம் அதிகரித்தால், முதலில் அரச ஊழியர்களுக்கே சலுகை

எதிர்காலத்தில் அரசாங்க வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் அரச ஊழியர்களுக்கே முதலில் சலுகை வழங்கப்படும் என, இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே இந்த வரி விதிப்பிற்கு உள்ளாகவுள்ளனர்.... Read more »

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் நீத்தி கடந்து சாதனை படைத்த ஏழு பேர்

இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் 7  நீச்சல் வீரர்கள், வீராங்கனைகள்  ஒரே நேரத்தில் நீந்தி சாதனை படைத்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ளது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளை. இதில் பெங்களூரைச் சேர்ந்த,... Read more »

இலங்கையில் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள தொழிற்சங்கங்கள்!

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அத்துடன், நாளை காலை 9 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளதோடு மேலும், திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து... Read more »

ரூபா மீண்டும் பின்வாங்கியது.. டொலர் மதிப்பு 320-340 ரூபா

கடந்த வாரத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது அதிகரித்த நிலையில் இந்த வாரத்தில் சில பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், கொள்வனவு விலை 320 ரூபாவாகவும் விற்பனை விலை 340 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.பொது... Read more »

அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதி அதிகரிப்பால் தற்போது இறக்குமதியாளர்களுக்கு பாதகமான நிலை ஏற்பட்டாலும், டொலர் பெறுமதி வீழ்ச்சியின் பயனை பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என இறக்குமதியாளர்களுக்கு... Read more »