பாதுகாப்பு காரணங்களுக்காக அணுமின் நிலையத்தை கைப்பற்றியுள்ளோம் – ரஷ்யா அறிவிப்பு.

உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையத்தை அதன் அணு எரிபொருள் மற்றும் பொருட்களைப் பாதுகாப்பதற்காக ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றியதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தெரிவித்துள்ளார். ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாகும், இது உக்ரைனின் அணுசக்தியில் பாதிக்கும் மேலானது எனவும், நாட்டின்... Read more »

ஐந்து மாத குழந்தை ஷெல் தாக்குதலில் பலி.

உக்ரைன் – ரஷ்யா விற்கு இடையிலான போர் நீடித்துள்ள நிலையில், உக்ரைன் நகரான கார்கிவில் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஐந்து மாத குழந்தையும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ஷெல் தாக்குதலில் ஐந்து மாத குழந்தை உட்பட 8... Read more »

திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரில் 7. பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி…..!

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் பத்துப்பேரில் ஏழுபேர் கவலைக்கிடம், திருச்சி அரசினர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது கடந்த 20/05/2022 முதல் திருச்சி சிறப்பு முகாமில்  தம்மை தமது குடும்பங்களுடன் சேர்த்து வைக்குமாறு கோரி... Read more »

மெக்சிகோவில் அடுத்தடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு! 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.

மெக்சிகோவில் அடுத்தடுத்த இரண்டு மதுபான விடுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. செலாயா பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 8 பெண்கள், 3 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். விடுதிக்குள் நுழைந்த 15 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டும் பெட்ரோல் குண்டுகளை... Read more »

பிரித்தானிய தீவொன்றில் இரகசியமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்.

பிரித்தானியா தனக்கு சொந்தமானதென கூறும் சாகோஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 89 இலங்கையர்கள் அடங்கிய குழுவில் 42 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவுக்குச் சொந்தமான சாகோஸ் தீவில் உள்ள இராணுவதளத்தில் கடந்த... Read more »

உக்ரைன் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமைக்குள் இணைய “15 அல்லது 20 ஆண்டுகள்” செல்லும்: கிளெமென்ட் பியூன்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர உக்ரைனின் முயற்சி முடிவடைய குறைந்தது “15 அல்லது 20 ஆண்டுகள்” ஆகும் என்று பிரான்சின் ஐரோப்பிய விவகார அமைச்சர் கிளெமென்ட் பியூன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அந்நாட்டு சமூக வானொலி ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். உக்ரைன்... Read more »

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக குரங்கம்மையை ஆயுதமாக்க திட்டமிட்ட ரஷ்யா.

ரஷ்யா மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக குரங்கம்மை நோயை ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாக முன்னாள் சோவியத் விஞ்ஞானி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். ரஷ்யா 1990 வரை குரங்கம்மை வைரஸை உயிரி ஆயுதமாகப் பயன்படுத்த திட்டங்களை வைத்திருந்ததாக முன்னாள் சோவியத் விஞ்ஞானி கனாட் அலிபெகோவ்  கூறியதாக பிரித்தனைய... Read more »

உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான “முயற்சிகளை இரட்டிப்பாக்க” போரிஸ் ஜான்சன் உறுதி.

உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க உள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு “முக்கிய உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவார்” என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, உக்ரைனிய... Read more »

இத்தாலியில் வெடித்து சிதறும் எட்னா எரிமலை! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்.

இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை வெடித்து நெருப்பு குழம்பை வெளியிட்டு வருகின்றது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மூன்று பெரிய எரிமலைகளில் ஒன்றான எட்னா எரிமலை ரோம், இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி நகரில் அமைந்துள்ளது. இந்நிலையில் எட்னா எரிமலை கடந்த மாத இறுதியில் வெடிக்கத் துவங்கியுள்ளதுடன்,... Read more »

பெரும் நிதி நெருக்கடியில் இலங்கை – சீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு.

இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கும், நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் சீனா சாதகமான பங்கை வகிக்க தயாராக இருக்கின்றது என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வான் வென்பின் இதனைத் தெரிவித்தார். நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை... Read more »