இத்தாலியில் வெடித்து சிதறும் எட்னா எரிமலை! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்.

இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை வெடித்து நெருப்பு குழம்பை வெளியிட்டு வருகின்றது.

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மூன்று பெரிய எரிமலைகளில் ஒன்றான எட்னா எரிமலை ரோம், இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி நகரில் அமைந்துள்ளது.

இந்நிலையில் எட்னா எரிமலை கடந்த மாத இறுதியில் வெடிக்கத் துவங்கியுள்ளதுடன், தற்போது இந்த எரிமலையின் முகப்பு பகுதியில் இருந்து ‘லாவா’ எனப்படும் நெருப்புக் குழம்பையும், சாம்பலையும் வெளியிட்டு வருகின்றது.

இத்தாலியில் வெடித்து சிதறும் எட்னா எரிமலை! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இதன் காரணமாக அருகில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இரவு நேரங்களில் எரிமலையில் இருந்து நெருப்பு ஜுவாலைகள் வெடித்துக் கிளம்புவதை தூரத்தில் இருந்தபடி சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றதுடன், இன்னும் சில நாட்கள் எரிமலை வெடிப்பு தொடரக்கூடும் என்பதால் அந்த பகுதிக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் வெடித்து சிதறும் எட்னா எரிமலை! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Recommended For You

About the Author: Editor Elukainews