யாழ். புங்குடுதீவில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூடு

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்றையதினம் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி சுபாகரன், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில்... Read more »

புத்தளத்தில் உயிரிழந்த நிலையில் 3 மாத யானைக் குட்டி மீட்பு…!

புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட முரியாக்குளம் எகொடபிட்டிய பகுதியில் 3 மாத யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானைக் குட்டியை பெரிய யானைகள் காலால் மிதித்து கொன்று இருக்கலாமென சந்தேகிப்பதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த யானைக்... Read more »

கற்பிட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு…!

கற்பிட்டி – முகத்துவாரம் பிரதேசத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று (30) கைப்பற்றப்பட்டுள்ளன. எனினும் இந்த சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை என கடற்படையினர் குறிப்பிட்டனர். புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினருடன் இணைந்து கடற்படையினரும், இராணுவத்தினரும் கூட்டாக சேர்ந்து குறித்த... Read more »

தெற்கு சீனாவில்24 பேர் பலி!

தெற்கு சீனாவில் சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவாங்டாங் மாகாணத்தில் மீஜோ நகரில் 60 அடி நீளமுள்ள சாலை இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. சரிவுக்கான காரணத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கடந்த சில நாட்களாக... Read more »

சினோபெக்கின் எரிபொருள் விலையும் குறைப்பு..!

சினோபெக் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று  நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொண்டிருந்தது. இந்த நிலையில் சினோபெக் நிறுவனம் எரிபொருட்களின் புதிய விலை விபரங்களைக் குறிப்பிட்டு... Read more »

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க இயலாது

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க இயலாது என பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்திலேயே பஸ் கட்டணங்களை குறைக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நேற்று(30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்... Read more »

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு..!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். பெருந்தோட்ட தேயிலை தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த வேதன அதிகரிப்பு தொடர்பான அதிவிசேட வர்த்தமானியை ... Read more »

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு – பதுளை பிரதான வீதியில், ஹப்புத்தளை – பெரகல பகுதியில் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊவா மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை... Read more »

நிதி இராஜாங்க அமைச்சர் ஜோர்ஜியாவுக்கு விஜயம்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஜோர்ஜியா சென்றுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாடு நாளை முதல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை ஜோர்ஜியாவின் தலைநகர் டிபிலிசியில் நடைபெறவுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின்... Read more »

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்…!

அவுஸ்திடேலியாவில்  தொழில் மற்றும்  கற்கை நடவடிக்கைக்காக செல்வதற்கு எதிர்பார்க்கும் இலங்கையர்களின் கனவை நனவாக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று கொழும்பு5 ஹெவ்லொக் சிட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த வேலைத்திட்டமானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த வேலைத்திட்டம் இலவசமாக நடத்தப்படவுள்ளதாக... Read more »