நெருக்கடியால் திணறும் சிறிலங்கா! உதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டில் சுமார் 12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள்,உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. 12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம், அமெரிக்காவின் பிரபல... Read more »

யாழ்ப்பாண கோட்டை பகுதியில் சமூகச் சீரழிவு – எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

யாழ்ப்பாண கோட்டை பகுதிகளில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக காவல்துறையினர் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தீடீர் சுற்றிவளைப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாண கோட்டை பகுதியை இன்றைய தினம் பார்வையிட்ட மாநகர... Read more »

ஜனாதிபதியின் தீர்மானம் குறித்து ஐ.நா கவலை

கொழும்பு மாவட்டத்தில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்துவதை தடுக்கும் நோக்கில் இலங்கை ஜனாதிபதி உயர் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்தியுள்ளது, சுதந்திரமான ஒன்றுகூடலிற்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளரின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. இது தொடர்பில் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் வூல் தனது டுவிட்டர் பதிவில் இதனை பதிவிட்டுள்ளார். இது... Read more »

போதைப்பொருள் வர்த்தகத்தை முடக்க விசேட செயலணி!

போதைப்பொருள் வர்த்தகத்தை முடக்கவும் கட்டுப்படுத்தவும் தனியான விசேட செயலணியொன்று தாபிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். போதைப்பொருட்களை வழங்குதல், விநியோகித்தல், விற்பனை செய்தல், மற்றும் பயன்படுத்துதல் ஆகிய விடயங்களை இந்த செயலணி மூலம் கட்டுப்படுத்தவும் முற்றாக முடக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.... Read more »

12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் இலங்கைக்கு அன்பளிப்பு

12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம், அமெரிக்காவின் பிரபல மனிதாபிமான உதவி அமைப்புகளுடன் இணைந்து, இலங்கைக்கு மருந்துகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. இதுவரை, 03 தடவைகளில்,... Read more »

ஜனாதிபதியின் பணிப்புரை: வரிச்சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் சுகாதாரப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், உள்நாட்டில் சுகாதாரத் துவாய் தயாரிப்பதற்காக ( Sanitary Napkin ) இறக்குமதி செய்யப்படும் பிரதான 05 மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து... Read more »

உயரம் பாய்தலில் பளை மத்திய கல்லூரிக்கு தங்கம்!

நடைபெற்று வருகின்ற வடமாகண பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டுப்போட்டியில் 14ஆண்களுக்கான உயரம்பாய்தலில் பளை மத்திய கல்லூரி மாணவன் K.தனதீபன் அவர்கள் 1.52m பாய்ந்து தங்கப்பதக்கத்தை சுவீகரித்து  புதிய சாதனை படைத்துள்ளார். இவருக்கு பயிற்றுவித்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர் திரு.டிலக்சன், உடற்பயிற்சி ஆசிரியர் திரு ஹரிகரன், மற்றும் வழிகாட்டிய... Read more »

முகமலை சிவபுர வளாகத்தில்  மிக சிறப்பாாக இடம் பெற்ற சிறுவர் முதியோர் தினம்…! 

முகமாலை சிவபுரவளாகத்தில் அமைந்துள்ள மூதாளர் அன்பு இல்லத்தில் இன்று சர்வதேச சிறுவர் முதியோர் தினம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. “மூதாளர்களுக்கு மதிப்பளிப்போம் சிறுவரை பாதுகாத்திடுவோம்” என்ற கருப்பொருளில் நேற்றைய தினம் மூதாளர் அன்பு இல்லத்தில்  சிறுவர் முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. நேற்று (2022.10.01) மாலை 4.30... Read more »

போரில் உயிரிழந்த மாணவர்கள் நினைவாக சிறுவர் தினத்தினை இரத்ததான முகாம்.

சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவர்கள் நினைவாக கிளிநொச்சி மகாவித்தியாலய 2015 உயர்தர மாணவ அணியினரின் “எழுகை” அமையத்தின் ஒழுங்குபடுத்தலில் குருதிக்கொடை முகாம்   நேற்றைய தினம் இடம்பெற்றது. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இந்த இரத்ததான முகாம் 9 வது... Read more »

ரணில் ராஜபக்சர்களின் அனைத்து வழிகளும் தோல்வி தேர்தலுக்குச் செல்வதே வழி.. ஜேவிபி சந்திரசேகரன் தெரிவிப்பு

ஜனாதிபதி ரணில் மற்றும் அவரது கை பொம்மைகளான ராஜபக்சக்கள் நாட்டை முன்னேற்றுவதற்கான அனைத்து வழிகளும் தோல்வி அடைந்த நிலையில் மக்கள் ஆணையை ஏற்று தேர்தலுக்குச் செல்வதே ஒரே வழி என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம்... Read more »