முகமலை சிவபுர வளாகத்தில்  மிக சிறப்பாாக இடம் பெற்ற சிறுவர் முதியோர் தினம்…! 

முகமாலை சிவபுரவளாகத்தில் அமைந்துள்ள மூதாளர் அன்பு இல்லத்தில் இன்று சர்வதேச சிறுவர் முதியோர் தினம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

“மூதாளர்களுக்கு மதிப்பளிப்போம் சிறுவரை பாதுகாத்திடுவோம்” என்ற கருப்பொருளில் நேற்றைய தினம் மூதாளர் அன்பு இல்லத்தில்  சிறுவர் முதியோர் தினம் கொண்டாடப்பட்டது.

நேற்று (2022.10.01) மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் அன்பேசிவம் அறக்கட்டளையின் தொண்டர்கள் கலந்துகொண்டதோடு மூதாளர்களுக்கு சிறப்புணவுகள் மற்றும் இனிப்புகள் பரிமாறப்பட்டு மூதாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். சிவபுரவளாகத்தினை சுற்றியுள்ள சிறுவர்களும் இணைந்து விழாவை சிறப்பித்தமை சிறப்பம்சமாகும்.

மூதாளர்கள் தம்மையும் சமூகத்தின்அங்கமாகக் கருதி முன்னெடுத்த மேற்படி நிகழ்விற்கு அன்பேசிவம் தொண்டர்களுக்கு நன்றிகளை தெரிவித்ததோடு தமது அன்பினையும் பரிமாறிக்கொண்டனர்

Recommended For You

About the Author: admin