யாழ். கலாசார நிலையம் இன்று கையளிப்பு! – ஜனாதிபதி, பிரதமருடன் இந்திய மத்திய அமைச்சரும் பங்கேற்பு

கலாச்சார, பாரம்பரியங்களின் மேம்பாட்டிற்காக இந்திய அரசாங்கத்தின் நிதி நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட, யாழ்ப்பாண கலாசார மையம்’ கையளிப்பு, இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வுகள் என்பன இன்று  மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இவற்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். காலை... Read more »

கிளிநொச்சியில் 3 லட்சம் பெறுமதிக்கு மேலான பொருட்கள் திருட்டு

கிளிநொச்சியில் 3 லட்சம் பெறுமதிக்கு மேலான பொருட்கள் திருட்டப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் பொதுச் சந்தையில் அமைந்துள்ள வெற்றிலை வாணிபம் ஒன்றிலேயே குறித்த திருட்டு நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மூன்று லட்சத்திற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக முறைப்பாடு... Read more »

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் 6 வது தொடர் கருத்தரங்கு….!

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறையும்,  அரசறிவியல் துறை பழைய மாணவர் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்தி வரும்  தொடர் கருத்தரங்கின் 6 வது அமர்வு நேற்றைய தினம்  பிற்பகல் 2:00 மணிக்கு யாழ்ப்பாணம் ... Read more »

21 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: துருக்கி- சிரியாவில் மீட்பு பணிகள் தீவிரம்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த 6ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப்... Read more »

டொலர் உள்ளிட்ட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி உயர்வு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க... Read more »

தடையில்லா மின்சாரத்தை கோரிய மனு நிராகரிப்பு!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் தடையில்லா மின்சாரத்தை வழங்குமாறு, இலங்கை மின்சார சபைக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. Read more »

யாழ். மாநகர சபை திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு

யாழ்ப்பாண கலாசார நிலையத்தை யாழ்ப்பாண கலாசார நிலையத்தை மக்களுக்கு உவந்தளிக்கும் நிகழ்வில் யாழ். மாநகர சபை திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார். கலாசார, பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக, இந்திய அரசாங்கத்தின் நிதி நன்கொடையின்... Read more »

ஜனாதிபதியின் உரை தமிழ் உப தலைப்புக்களுடன் வெளியிடப்படும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உரை இனிவரும் காலங்களில் தமிழ் உப தலைப்புக்களுடனேயே வெளியிடப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் தனுஸ்க ராமநாயக்க  தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கும் யாழ்ப்பாண பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (பெப் 09) மாலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்... Read more »

தபால் மூல வாக்களிப்பிற்கான 40,000 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிக்க ஆறு இலட்சத்து 76 ஆயிரத்து 873 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும், தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச ஊழியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல... Read more »

தேர்தலை நடாத்த உச்ச நீமன்றம் உத்தரவு…..!

உள்ளூராட்சித் தேர்தலை திட்டமிட்டபடி முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு சற்றுமுன் உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் உள்ளூராட்சி மன்றத்... Read more »