ஆதிசிவன் கோவில், சடையம்மா மடம், கதிரைவேலன் கோவில் ஆகியவற்றை மீள கட்டுவதற்கு அனுமதியுங்கள்!

கீரிமலை ஆதிசிவன் கோவில், சடையம்மா மடம், கதிரைவேலன் கோயில் ஆகியவற்றின் நிலை என்ன? என அகில இலங்கை இந்துமாமன்ற உப தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.  இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை சைவமக்களின் மிகத்... Read more »

பயணிகள் பேருந்தில் இளைஞன் மீது சரமாரி கத்திக்குத்து! ஒருவர் கைது மற்றொருவர் தப்பி ஓட்டம்.. |

தனியார் பயணிகள் பேருந்தில் பயணிதத இளைஞன் ஒருவன் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் பிலியந்தலை பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. பிலியந்தலையில் இருந்து கஹபொல நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணிகளின் பணப்பையொன்றை இருவர்... Read more »

காட்டில் தனிமையில் வாழ்ந்த முன்னாள் போராளி பாதுகாப்பாக மீட்கபு..!

மட்டக்களப்பு – தாந்தாமலைக் காட்டுப் பகுயில் தனிமையில் வாழ்ந்துவந்த முன்னாள் போராளி ஒருவர் நேற்று முன்தினம்  புதன்கிழமை (08.03.2023) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடந்த 4 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, முன்னாள் போராளியான மனநலம் குன்றிய பாலா என்பவர் தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா... Read more »

நாடு தழுவிய பணிப் புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்..!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 15ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. குறிப்பாக சம்பள பிரச்சினை, உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் உள்ளிட்டவை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம்,  இலங்கை ஆசிரியர்... Read more »

சாவகச்சோியில் வீடு உடைத்துக் கொள்ளை! இணுவிலில் பதுங்கியிருந்த 3 பேர் கைது, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களும் மீட்பு.. |

யாழ்.சாவகச்சோி – கெருடாவில் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் யாழ்.இணுவில் பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  யாழ்.சாவகச்சேரி கெரடாவில் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த வீட்டுத் தளபாடப் பொருட்கள் கடந்த மாதம் களவாடப்பட்டிருந்தன. அதனை அடுத்து வீட்டு உரிமையாளரால்... Read more »

வவுனியாவில் நால்வர் உயிரிழப்பு விவகாரம்! பிள்ளைகள் கழுத்து நெரித்து படுகொலை- உடற்கூறாய்வில் உறுதி

வவுனியாவில் மர்மமான முறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவத்தில் குழந்தைகள் இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரு குழந்தைகளும் கயிற்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக உடற்கூறாய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா, குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் தந்தை, தாய் மற்றும் அவர்களின் இரண்டு... Read more »

வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி

யாழ். அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றையதினம் பாடசாலையின் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விருந்தினர்கள் மாலை அணிவித்து பான்ட் இசையுடன் அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றி வைத்து நிகழ்வு ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டு, ஒலிம்பிக் தீபம்... Read more »

இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்போம் – உலக வங்கி

இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை வரவேற்பதாகவும் அதற்காக தாம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது. தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலேயே உலக வங்கியின் பிரதித் தலைவர் மார்ட்டின் ரைசர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்களைப் பாதுகாப்பதற்கும் பொருளாதாரத்தை மீட்பதற்குமான முக்கிய... Read more »

இன்று முதல் அமுலாகும் வகையில் 7 பொருட்களின் விலைகள் குறைகிறது

சதொச நிறுவனம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 7 பொருட்களின் விலையை குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் 75 ரூபாவினாலும், கோதுமை மா 15 ரூபாவினாலும் சிவப்பு பருப்பின் விலை 19 ரூபாவினாலும், வெள்ளை சீனியின் விலை 11 ரூபாவினாலும்... Read more »

ஆசிரியர் சங்கங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

எதிர்வரும் 15 ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கிய வகையில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின்... Read more »